பானுமதியின் காதல் கதை
தமிழ்த் திரையுலகம் எத்தனையோ நடிகைகளை சந்தித்திருக்கிறது. அவர்கள் எல்லோரிடமிருந்தும் முற்றிலும் மாறுபட்டவர் பானுமதி. நடிகைகளில் அவர் ஒரு துருவ நட்சத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எழுத்தாளர்,பாடகி,
இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, என்று தமிழ் தெலுங்கு
சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்த பானுமதி “நடிப்புக்கு இலக்கணம்
வகுத்த நடிகை” என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.
படங்களில் நடிக்கும்போது பானுமதியைத் தொட்டுப் பேசக் கூட அவரது கதா நாயகர்கள் தயங்குவார்களாம் . பல கதாநாயகர்கள் இந்தக் காட்சியில் இந்த வசனத்தைப் பேசும்போது உங்களது கையைத் தொடுவேன் என்று அவரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டுத்தான் அவரது கையைத் தொடுவார்களாம். அந்த அளவிற்கு தனித் தன்மையோடு இருந்த ஒரு நடிகைதான் பானுமதி.தவறு என்று மனதுக்குப் பட்டுவிட்டால் அதைத் தட்டிக் கேட்கத் தயங்காத கண்ணியமிக்க ஒரு நடிகையாக அவர் திகழ்ந்தார் .
பெயர் சொல்லி எம்.ஜி.ஆரை அழைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயங்கிய கால கட்டத்தில்" மிஸ்டர் ராமச்சந்திரன்" என்று உரிமையோடு அவரை அழைத்த ஒரே நடிகை பானுமதி மட்டுமே.எம்.ஜி.ஆரிடம் எந்த அளவு பானுமதி க்கு உரிமை இருந்தது என்பதை விளக்க அவருடன் ஒரு திரைப்படத்தில் பானு மதி நடித்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
வாள் சண்டை போட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை எம்.ஜி.ஆர் மீட்பது போல ஒரு காட்சி ஒரு படத்துக்காக படமாக்கப்பட்டது. அந்தச் சண்டை நடக் கும்போது பானுமதி அடிக்கடி தனது பயத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் காட்சி ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல.பல முறை படமாக்கப் பட்டும் சரி யாக அமையவில்லை.பயந்த மாதிரி திரும்பத் திரும்ப நடித்த பானுமதி எம்.ஜி. ஆரை அழைத்தார். "மிஸ்டர் ராமச்சந்திரன் அந்த வாளை என்னிடம் கொடுங் கள்.நானே சண்டை போட்டு என்னை மீட்டுக் கொள்கிறேன்" என்றாராம்.
இப்படி
பேசக்கூடிய துணிச்சல் யாருக்கு வரும் ?
படப்பிடிப்பு
தளங்களில் அப்படி இரும்பாக இருந்த பானுமதி காதல் வசப்பட்ட
போது அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகளிலோ சினிமாவிலோ கூட பார்க்க
முடியாது. அந்த அளவிற்கு பானுமதியின் காதல் கதை,ஒரு அழுத்த மான காதல் கதை.
பானுமதியின் தந்தையான பொம்மராஜூ
வெங்கடசுப்பையாவை ஒரு இசைப் பிரியர் என்று
சொல்வதை விட இசைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண் டும். தன்னுடைய மகளான
பானுமதியின் குரல் இந்தியா முழுவதும்
கேட்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருந்த அவர் சிறுவயது முதலே பானுமதிக்கு கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக்கொடுத்தார்.
அவருடைய நெருங்கிய நண்பரான இயக்குனர் பி.புல்லையாவின் இயக்கத்தில்
உருவான "வர விக்ரயம்" என்ற தெலுங்குத்
திரைப்படத்தில் நடிக்க பானுமதியை அவர் அனு மதித்ததற்கு முக்கியமான காரணம் அவரது
இசை ஆர்வம்தான். தன் மகள் ஒரு பாட்டுக் கச்சேரியில் பாடினால் நூற்றுக் கணக்கான
ரசிகர்கள்தான் அவரது பாட் டைக் கேட்க
முடியும்.ஆனால் சினிமாவில் பாடினால் லட்சக் கணக்கானவர் ஒரே நேரத்தில் தனது மகளின்
குரலைக் கேட்க முடியுமே என்ற எண்ணத்தில்தான் பானுமதியை படத்தில் நடிக்க வைத்தார்
அவர்.
இருப்பினும் பானுமதியுடன் படத்தில் நடிக்கின்ற
ஆண் நடிகர்கள் அவரைத் தொட்டுப் பேசுவது போலவோ,நெருக்கமாக நின்று நடிப்பது போலவோ
எந்தக் காட்சிகளும் இருக்கக்கூடாது என்பது
உட்பட அவர் விதித்த பல நிபந்தனை களுக்கு படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்ட பிறகே
அந்தப்படத்தில் பானுமதி நடிக்க அவர் தனது ஒப்புதலைத் தந்தார்.அத்தனை நிபந்தனைகள்
விதித்தாலும் அந்த சினிமாதான் தனது மகளைத் தன்னிடமிருந்து ஒரு கால கட்டத்தில்
பிரிக்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது
பானுமதி நடித்த முதல் படமே மிகப் பெரிய
வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த பானுமதி 1943 ஆம் ஆண்டில் "கிருஷ்ண
பிரேமா" என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
தனது காதல் கணவரான ராமகிருஷ்ணாவை அந்தப் படத்தின்
படப்பிடிப்பின் போதுதான் முதல் முதலாக சந்தித்தார் பானுமதி.
முதல் சந்திப்பிலேயே பானுமதியின் கவனத்தை ஈர்த்தார்
ராமகிருஷ்ணா. படப் பிடிப்பு தளத்தில் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்த சுறுசுறுப்பான,
அழகான வாலிபன் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்ட பானுமதி படப் பிடிப்பு
இடைவேளைகளில் வைத்த கண் வாங்காமல் அவரையே
பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கினார் . அந்த படத்தை விட பானுமதிக்கு ராமகிருஷ்ணா மேல் இருந்த காதல் வேகமாக வளர்ந்தது.இதில் மிகப்பெரிய
வேடிக்கை என்ன வென்றால் படத்தின் நாயகியான
பானுமதி தன்னை காதலித்துக் கொண்டிருக் கிறார்
என்பதைப் பற்றி அந்த ராமகிருஷ்ணாவுக்குக் கொஞ்சம் கூட தெரியாது என்பதுதான்.
பானுமதியின் காதல் விவகாரம் தெரிந்ததும் எல்லா
அப்பாக்களையும்போல பானுமதியின் அப்பாவான வெங்கட
சுப்பையாவும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.அந்தக் கல்யாணம் நடக்கவே
நடக்காது என்றார். சினிமாவில் பணி புரியும் ஒருவருக்கு தனது மகளைத் திருமணம்
செய்து கொடுப்பதில் அவருக்கு ஒரு சதவிகிதம் கூட உடன் பாடில்லை.
ஆனால் பானுமதி தான் எடுத்த முடிவில் உறுதியாக
நின்றதால் வேறு வழியின்றி திருமணம் பற்றி
பேச ராமகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு அழைத்தார் பானு மதியின் தந்தை.
அளவில்லாத நடிப்புத்திறனும், அழகும் கொண்ட
பானுமதி என்ற கதாநாயகி
தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்ற
விஷயம் உதவி இயக்குனரான ராமகிருஷ்ணவுக்கு அப்போதுதான் தெரிந்தது .
பானுமதி எப்படிப்பட்ட பண்பான நடிகை என்பதை அந்தப் படத்தின் படப் பிடிப்பின்போது ராமகிருஷ்ணா
நன்கு அறிந்திருந்தார்.ஆகவே பானுமதி
தன் னைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் அவர்
மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் . பானுமதியை
மனைவியாக ஏற்றுக் கொள்ள அவர் பெரிதும் விரும்பியபோதிலும் அதற்கு சில
நிபந்தனைகளை விதித்தார்.
"நான் அடிப்படையில் ஒரு ஏழை.அப்படிப்பட்ட
நான் மிகவும் வசதியான வாழ்க் கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகியான பானுமதியை
திருமணம் செய்துகொண்ட பிறகு நாங்கள்
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் என்னுடைய சில
நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். முதலில் என்னுடைய நிபந்தனைகள்
என்னென்ன என்பதை உங்க ளுக்குச் சொல்கிறேன்
. அவை எல்லாம் உங்களுக்கு
ஒத்துவருமா என்று பாருங் கள்" என்று சொல்லிவிட்டு தனது நிபந்தனைகளைப்
பட்டியலிடத் தொடங்கினார் அவர்.
அவரது முதல் நிபந்தனையே இடி மாதிரி வேங்கட சுப்பையாவின் தலையில் இறங்கியது.
"என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகு
உங்களது பெண் சினிமாவில் நடிக் கவோ கச்சேரிகளில் பாடவோ, கூடாது. இவை
எல்லாவற்றிற்கும் அறவே முற் றுப் புள்ளி வைத்து விடவேண்டும் " என்று அவர் சொன்னவுடன்
பானுமதியின் தந்தையான வெங்கட சுப்பையாவிற்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. பல்லைக்
கடித்துக் கொண்டு அந்த அறையை விட்டு வேகமாக வெளியே
சென்று விட்டார்.
அவரது உறவினர்களில் சிலர் வெங்கட
சுப்பையாவை சமாதானப் படுத்தினர். "சினிமாவில் பானுமதி நடிப்பதைத்தான் அவர்
விரும்ப மாட்டார் ஆனால் பானுமதி கச்சேரிகளில் பாடக் கூடாது என்ற முடிவில் அவர் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே
பாடுவதற்கு மட்டும் அவரிடம் அனுமதி கேட்டு வாங்கிக் கொள்ளலாம்
வாருங்கள்"என்று கூறி அவரை மீண்டும் வீட்டுக்குள் அவர்கள் அழைத்து வந்தார்கள்.
"நீங்கள் சொன்னபடி சினிமாவில் நடிப்பதை
நிறுத்திவிடச் சொல்கிறேன் . அவர் மிகப் பெரிய பாடகியாக வர வேண்டும் என்பது எனது
வாழ்நாள் லட்சியம் என்ப தால் குறைந்த பட்சம் அவர் பாட்டுக் கச்சேரி
நடத்துவதற்காவது நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்று ராமகிருஷ்ணாவை
வேண்டிக்கேட்டுக் கொண் டார் பானுமதியின்
தந்தை
அதற்கு ராமகிருஷ்ணா என்ன பதில் சொன்னார் ?
Comments
Post a Comment