எம் ஜி ஆருக்கும் தங்கவேலுவிற்கும் இருந்த ஒற்றுமைகள்

எம்.ஜி.ஆரோடு எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் கே. .தங்கவேலு என்பதை எல்லோரும் அறிவார்கள்.ஆனால் எம். ஜி. ஆருக்கும் தங்கவேலுவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு என்பதை சினிமா உலகிலுள்ள பலர் கூட அறிந்திருக்க மாட்டார்கள். 

 


எம். ஜி. ஆர் பிறந்த அதே 1917 ஆம் ஆண்டில், அவர் பிறந்த அதே ஜனவரி மாதத்தில் பிறந்தவர்தான் கே..தங்கவேலு. எம்.ஜி.ஆர் பிறந்தது ஜனவரி 17ஆம் தேதி.கே..தங்கவேலு  பிறந்தது ஜனவரி 15ஆம் தேதி.அந்த வகையில் எம். ஜி. ஆருக்கு  இரண்டு நாட்கள் மூத்தவர் அவர்

 

எம். ஜி. ஆர் அறிமுகமான “சதிலீலாவதி” படத்திலேதான் தங்கவேலுவும் அறி முகமானார்.எம். ஜி. ஆருக்கு திரைப்பட வாய்ப்பைப் பெற்றுத் தந்த எம்.கே. ராதாதான் தங்க வேலுவிற்கும் சினிமா வாய்ப்பைப் பெற்றுத் தந்தார்.



“சதிலீலாவதி” படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத் தன.ஆனால் தங்கவேலுவிற்கு அடுத்த சினிமா வாய்ப்பு பதினைந்து ஆண்டுகளுக் குப் பிறகே கிடைத்தது. “சதி லீலாவதி” படத்திற்குப் பிறகு தங்க வேலு நடித்த படமாக “சிங்காரி” என்ற படம் அமைந்தது.இந்த சிங்காரி ஏற்கனவே நாடக மாக நடிக்கப்பட்ட கதை. நாடகத்தில் ஏற்ற வேடத்தையே திரைப் படத்திலும் ஏற்றார் தங்கவேலு

தங்கவேலுவின் பெயருடன் "டணால்" என்ற பட்டப்பெயர் ஒட்டிக் கொண்டது இந்த


“சிங்காரி”

அந்த படத்தில் பல இடங்களில் “டணால்” என்ற வார்த்தையைப் பயன் படுத்தி இருந்தார் அவர்.”சிங்காரி” படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்த தங்கவேலுவுக்கு தமிழ்த் திரை யுலகில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம் “பணம்”. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த இரண்டாவது படமான

 


“பணம்”

படத்திலே சிவாஜியுடன் நடிக்கத் தொடங்கிய தங்கவேலுவின் திரையுலகப் பயணம் அவ ரோடு இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது .

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்தான்  தங்கவேலுவிற்கு  “பணம்” படத்திலே நடிக்கும்  வாய்ப்பை வழங்கியவர். தங்கவேலுவின் திறமை மீது அவருக்கு அப் படி ஒரு அபார  நம்பிக்கை இருந்தது. “பணம்” படத்திலே நடிக்க ஒப்பந்தமான போது தங்கவேலுவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத  ஒரு சம்பவம் நடந்தது.

அந்தப்  படத்திலே நடிப்பதற்காக ஆயிரம்  ரூபாயை தங்கவேலுவிற்கு முன் பண மாகக் கொடுத்தார் கலைவாணர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற் குப் போன  தங்கவேலு “பணம்” படத்திலே நடிப்பதற்கு தன்னை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் படத்தில் நடிக்க சம்பள மாக  ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் சொன்னபோது  தங்கவேலுவின் பெரியப்பா  மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக தங்கவேலுவைப் பார்த்து உரத்த குர லில் சத்தம் போட ஆரம்பித்தார்.

கலைவாணர் வீட்டிலிருந்து அவருக்குத் தெரியாமல் அந்த பணத்தை தங்கவேலு எடுத்துக் கொண்டு வந்து  விட்டதாக  அவரது பெரியப்பா எண்ணியதே அதற்குக் காரணம்.

அவர் அப்படி சந்தேகப்பட்டதிலும் தவறு இல்லை என்றுதான் சொல்லவேண் டும். ஏனெனில் அப்போது நாடகங்களில்  நடிக்க ஒரு மாதத்திற்கு தங்கவேலு வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் பத்து ரூபாய். அப்படி இருக்கும்போது படத்தில் நடிக்க அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்று அவர் சொன்னால் யார்  நம்புவார்கள் ?  

"ஏன்தான் உன் புத்தி இப்படிப் போகுதோ தெரியவில்லையே. உனக்கு சோறு போட்டு அவரோட புள்ளை மாதிரி இல்லே கலைவாணர் உன்னை வளர்த்தார். அன்னமிட்ட வீட்டிலேயே கன்னம் இடலாமா?அவர் வீட்டிலேயே  இப்படி பணத்தைத் திருடி விட்டு வந்திருக்கிறாயே" என்று சொல்லியபடி தங்கவேலுவை அடிக்க ஆரம்பித்த அவருடைய பெரியப்பா  தங்கவேலு சொன்ன எந்த விளக்கத் தையும் கேட்கத் தயாராக இல்லை.ஆகவே வேறு வழியின்றி  தனது பெரியப் பாவை கலைவாணர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் தங்கவேலு.

அங்கு போன பிறகு "ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான்.இனிமே அப்படி எல் லாம்  நடக்காம நான் பார்த்துக் கொள்கிறேன்"என்று தங்கவேலுவின் பெரியப்பா சொன்னபோது கலைவாணருக்கு ஒன்றுமே புரியவில்லை.



அதற்குப் பிறகு நடந்த சம்பவத்தைப் பற்றி தங்கவேலு கலைவாணருக்கு விளக்க மாகச் சொல்ல"இதுக்காகவா தம்பியை தேவையில்லாம போட்டு அடிச்சிட்டீங்கஎன்று சொன்ன கலைவாணர் “அந்தப் பணம் என்னுடைய படத்தில் நடிப்பதற் காக நான் கொடுத்த முன்பணம்தான்”  என்று சொன்னவுடன்தான் அவரது பெரிய ப்பா சமாதானம் அடைந்தாராம்

"என்னுடைய வாழ்க்கை கலைவாணர் எனக்கு போட்ட பிச்சை. ஆரம்பத்தில் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்தது மட்டுமின்றி தொடர்ந்து என் வளர்ச் சிக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர்” என்று பல பத்திரிகைப் பேட்டி களில் குறிப்பிட்டுள்ளார் தங்கவேலு..

எம். ஜி. ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ். எஸ். ராஜேந்திரன்,ஜெய்சங்கர், ரவிச் சந்திரன் என்று தங்கவேலு இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம்.

காமெடி நடிகர்களால்  கதாநாயகனாகவும் நடிக்கமுடியும் என்று நாகேஷ்,தொட ங்கி கவுண்டமணி,விவேக்,சந்தானம்,கருணாஸ்,என்று பல பேர் இன்று நிரூபித் திருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பெருமை தங்கவேலுவையே சேரும். சாதாரணமாக பெரிய பெரிய கதாநாயகர்களே  ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு   பயப் பட்ட பானுமதியுடன் “ரம்பையின் காதல்” படத்தில் நாயகனாக நடித்தர் தங்க வேலு

தங்கவேலுவுடன் படங்களில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ஜோடியான எம்.

சரோஜாவுடன் தங்கவேலு நடித்த படங்களில் மறக்க முடியாத  படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான “கல்யாணப் பரிசு”



அந்தப் படத்திலே தான்தான் எழுத்தாளர் பகீரதன் என்று தனது மனைவியான சரோஜாவிடம் பொய் சொல்லிவிட்டு ஒரு பாராட்டுவிழாக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு தங்கவேலு வீடு திரும்பும்  காட்சியை திரையில் பார்க்கும் எவரா லும் சிரிப்பை அடக்க முடியாது..திரையில் ஐந்து நிமிடங்கள் ஓடிய அந்தக் காட் சியை ஒரே டேக்கில் தங்கவேலுவும்  சரோஜாவும் நடித்தபோது தனது சிரிப்பை அடக்க முடியாமல் கைக்குட்டையை வைத்து  வாயை மூடிக் கொண்டாராம் இயக்குனர் ஸ்ரீதர் .செட்டில் இருந்த பலர் சிரிப்பை அடக்க முடியாமல் அந்த செட்டை விட்டே ஓடிய சம்பவம் எல்லாம் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது நடந்திருக்கிறது.

“கல்யாணப் பரிசு” தங்கேலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்  அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்பது மட்டுமல்ல.அந்தப் படத்தின் நூறா வது நாள் விழா மதுரையில் நடைபெற்ற போதுதான் மதுரை அருகேயுள்ள திருப் பரங்குன்றத்தில் எம். சரோஜாவை திருமணம் செய்து கொண்டார் அவர்.

தமிழ்த் திரையுலகில் சரித்திரகால பாத்திரங்கள்,புராண பாத்திரங்கள் என்று எல்லா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கூடிய நாயகர்களாக இருந்தவர்கள் எம். ஜி. ஆர், சிவாஜி, ஜெமினி,  எஸ். எஸ். ராஜேந்திரன் என மிகச் சிலரே. இருந்த கதாநாயகர் களைப் போல எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடியவராக இருந்த  ஒரே நகைச்சுவை நடிகர் தங்கவேலு .

நேரிலே பேசும் போதும் சரி படங்களில் நடிக்கும்போதும்  அறச் சொற்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்த கலைஞர் தங்கவேலு.அதுபோன்று தன் வாழ்நாள் முழுவதும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக் கொண்டு அதி லிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கை நடத்தியவர் அவர்

தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை இறுதி மூச்சு வரை கடை பிடித்தார் அவர்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் நடிக்கக் கூடிய வாய்ப்பு எண்ணற்ற கலைஞர் களுக்குக் கிடைத்திருக்கலாம் ஆனால் அவரோடு சேர்ந்து நூற்றாண்டைக் கொண்டாடுகின்ற அரிய வாய்ப்பு தங்கவேலுவுக்கு மட்டுமே அமைந்த ஒரு தனிப் பெருமை.

 

Comments

  1. Director bala enna saithu konduieukirar movie eaduthudu irukurara from salem vijayakumar

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிவாஜின் நடிப்பை குறை சொன்ன இயக்குனர்