Posts

Showing posts from September, 2021
Image
                         ஒரு ருபாய் சம்பலத்திற்கு  நடிக்க தயாராக இருந்த கதாநாயகர்  மிகுந்த கடவுள் பக்தி உள்ளவராக விளங்கிய ஏவி. மெய்யப்ப செட்டியா ரின் இஷ்ட தெய்வம் முருகர். அதனால்தான் அவரது பிள்ளைகளுக்குக் கூட பழனியப்பன் , முருகன், குமரன் சரவணன்,பாலசுப்ரமணியன் என்று முருகக் கடவுளின் பெயர்களையே வைத்தார். முருகக் கடவுளின் திருவிளையாடல்களை “ஸ்ரீ வள்ளி” என்ற பெயரிலே தயாரிக்க முடிவு செய்த ஏவி.எம் அந்தப் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாலே முருகக் கட வுளின் கோவில்கள் பலவற்றிற்கு சென்று முரு கப்   பெருமானிடம் வித்தியாச மான வேண்டுகோள் ஒன்றை வைத்தார் “ஸ்ரீ வள்ளி” திரைப்படம் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கதையைப் படமாக்கும்போது என்னையும் அறியாமல் நான் சில தவறுகள் செய்ய லாம் . அதற்காக என்னை மன்னித்துக் கொள் அப்பா ” என்று முருகனிடம் மனமார வேண்டிக் கொண்டு வந்த பிறகே அப்படத்தைத் தொடங்கினார் அவர் வள்ளியாக நடிக்க குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்துவிட்டு முருகர் வேடத் தில் நடிக்க நல்ல குரல் வளம் மிக் க நடிகரை ஏவி.எம். தேடிக் கொண்டிருந்த போது டி. ஆர் மகாலிங்கம் அவரைத் தேடி வந்தார்.
Image
     அபூர்வ ராகங்கள் பாடலுக்கு ராகத்தைத் தேர்ந்தெடுத்துத் தந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா  தனது 6-வது வயதிலேயே இசைப் பயணத்தைத் தொடங்கிய இசை மேதை மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவை பாடகர் என்ற ஒரு கூட்டுக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. மற்றவர்கள் எடுத்தாளாத பல ராகங்களை இயற்றிப் பாடியிருக் கும் இந்த இசைச் சக்ரவர்த்தி   தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என  பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியவர்.  கர்னாடக இசை உலகின் ஜாம்பவானான  இவர் 1930-ம் ஆண்டு ஜுலை மாதம் ஆறாம் தேதியன்று   ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தார் .அந்த ஊரில் ஊற்றெடுத்த இந்த இசை நதி பின்னர் இசை வெள்ளமாக மாறி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இசை ரசிகர் களை தனது பரவசமூட்டும் இசையால் திக்கு முக்காடச் செய்தது என்பதுதான் உண்மை  உலகின் பல்வேறு நாடுகளில் 25,000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ள பாலமுரளி கிருஷ்ணா  400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர்.  இசைக்கருவிகள் பலவற்றை இசைக்கின்ற திறமையும் பெற்றிருந்த பாலமுரளி கிருஷ்ணா திரைப்படத்திற்காக பாடிய முதல் பாடல் சதி சா
Image
எம். ஜி. ஆரின் அழைப்பை நிராகரித்த பஞ்சு அருணாச்சலம்  கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று தமிழ்த் திரையுலகில் பல துறைகளில் சாதனை படைத்த பஞ்சு அருணாசலம் கவியரசு கண்ணதாசனின் உதவியாளராகத்தான் திரையுலகில் முதலில் அறிமுகமானார்   கண்ணதாச னை ப் பொறுத்தவரை அவருக்கு நிரந்தர எதிரியும் இல்லை-நிரந்தர நண்பரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.   சிவாஜிகணேசனைப் பகைத்துக் கொண்டு எம். ஜி. ஆரோடு நெருக்கமாக இருந் த வர் கண்ணதாச ன் . ஒரு கால கட்டத்தில் எம் . ஜி . ஆருக்கும் அவருக்கும் இருந்த உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது   அதைத் தொடர்ந்து என்னுடைய படங்களுக்கு   வசனம் எழுதவோ   பாடல் எழு தவோ கண்ணதாசனை அழைக்காதீர்கள் என்று தனது தயாரிப்பாளர்கள் அனைவரி டமும் கண்டிப்பாகக் கூறினார் எம்.ஜி.ஆர். அப்படி கண்ணதாசனிடமிருந்து எம்.ஜி.ஆர் விலகி இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் தான் எம். ஜி. ஆர் நாயகனாக நடித்த “கலங்கரை விளக்கம்” படத்தில் பாடல் எழுதக் கூடிய வாய்ப்பு அப்போது கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலத்துக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை பஞ்சு அருணாசலத்துக்கு வழங்கியவர், பஞ்சுவின் நெருங
Image
கே . வி மகாதேவன் மிது எம் எஸ் விசுவநாதன் வைத்திருந்த பக்தி ஆரம்ப காலத்தில் டி.எஸ். பாலையாவின் நாடகங்களுக்கெல்லாம் மெட்டுப் போடுவது தவிர  நாடகத்தின் போது ஆர்மோனியம் வாசிக்கும் வேலையையும் செய்து வந்த விஸ்வநாதன்  இடைவேளைக்குப் பிறகு அந்த நாடகங்களில் சின்னச் சின்ன வேடங்களில் தோன்றுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார். அனு மார் வேடம், ராஜா வேடம் என்று பல வேடங்கள் ஏற்று நடித்த அவரை காலிசெய்ய  சனிபகவான்  ஒரு வில்லின் ரூபத்தில் வந்தார்.  ஒரு நாள் இராமாயண நாடகத்தில்  சீதையின் சுயம்வரத்தில் கலந்து கொள்கின்ற  ராஜாவின் வேடத்தில் நடித்த விஸ்வநாதன் அந்தக் காட்சியில் தப்பித் தவறி வில்லை உடைத்துவிட்டால் பிரச்னையாகி விடும் என்பதால் ஒரு முறைக்கு இரு முறை ஒத்திகை எல்லாம் பார்த்துவிட்டு அதற்குப் பிறகுதான் மேடைக்குப் போனார். ஆனால் அன்று விதி செய்த சதியின் காரணமாக அவர் வில்லைத் தொட்டவுடனேயே அது “மளார்” என்று முறிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த நாடக அரங்கத்தில் பெரும் கூச்சல் எழுந்தது  “வில்லை உடைத்த ராஜாவுக்கு சீதாவை கட்டி வை” என்று  வில்லங்கமான ரசிகர் கள்  சிலர் குரல் கொடுக்கத் தொடங்க விஸ்வநாதனுக்கு எ